Latest News
பொன்னியின் செல்வன் வரலாறு… கங்குவா கற்பனை!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்!..
Kanguva movie : தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளில் அமீருடன் நடந்த பிரச்சனை தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
அதில் அமீருக்கு ஆதரவாகதான் அதிக குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா. தற்சமயம் ஞானவேல் ராஜா கங்குவா என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படம் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஞானவேல் ராஜா. மேலும் இந்த திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசும் பொழுது சில தவறான தகவல்களை பேசியதால் ஞானவேல் ராஜா தற்சமயம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
அவர் தனது பேட்டியில் கூறும் பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாறு அதை வந்து நாம் மாற்றி எடுக்க முடியாது. அதன் கதை இருக்கிறதோ அப்படியாக தான் எடுக்க வேண்டும் ஆனால் கங்குவா அப்படி கிடையாது. எனவே அது நமக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே படமாக்கிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார் ஞானவேல் ராஜா.
ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறுடன் திரித்த கற்பனை என்பதுதான் உண்மை. அதில் நடந்து மொத்த கதையும் வரலாற்றில் நடந்த கதை கிடையாது. அதில் உள்ள கதாபாத்திரங்கள் பலவும் கூட செயற்கையாக அதில் சேர்க்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் என்கின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.
அப்படி இருக்கும் பொழுது அது கூட தெரியாமல் ஒரு தயாரிப்பாளர் அதை வரலாறு என்று கூறுகிறாரே என்று அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.