Connect with us

ஜவான் படத்தோட சாயல் இருக்கா?.. எப்படியிருக்கு விஜய்யின் கோட் திரைப்படம்..

GOAT

Movie Reviews

ஜவான் படத்தோட சாயல் இருக்கா?.. எப்படியிருக்கு விஜய்யின் கோட் திரைப்படம்..

Social Media Bar

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக கோட் திரைப்படம் உள்ளது.  நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிற காரணத்தினால் அவர் நடிக்கும் கடைசி இரண்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

அதிலும் கோட் திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு முன்பு விஜய் திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பை விடவும் அதிகமாகவே இந்த படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது. முக்கியமாக பாடத்தில் எத்தனை விஜய் என்பதெல்லாம் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் படம் இன்று வெளியாகி இருக்கிறது படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்

படத்தின் கதைப்படி தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவை நிர்வாகித்து வருபவர்தான் நடிகர் விஜய். அந்த குழுவின் தலைமையாக இவர் இருந்து பல தீவிரவாதிகளை பிடிப்பதற்கு உதவி செய்து வருகிறார்.

படத்தின் கதை:

மேலும் வாழ்க்கையில் தோல்வி என்பதையே காந்தி (விஜய்) கண்டது கிடையாது என்கிற அளவிற்கு அவர் இறங்கும் ப்ராஜெக்டுகள் அனைத்திலும் வெற்றியை மட்டுமே காண்பவர் விஜய்.

அவரது குழுவில் தான் பிரபுதேவா நடிகர் பிரசாந்த் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இளமை காலங்களில் விஜய் நிறைய வெற்றிகளை பெற்றவராக இருக்கும் அதே சமயம் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் அவருக்கு ஒரு ப்ராஜெக்ட் இருக்கிறது அதற்கு போகும் பொழுது வெக்கேஷன்காக தனது குடும்பத்தையும் அங்கு அழைத்து செல்கிறார். இந்த நிலையில் அங்கு நடக்கும் ஒரு விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழக்கிறார் விஜய்.

அதே சமயம் அந்த விபத்தில் நடக்கும் ஒரு விஷயம் அவர் எதிர்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என்பதும் அவருக்கு தெரியவில்லை அந்த விபத்துக்கு பிறகு தனியாக வாழும் விஜய் பிறகு இதே போல வேறு ஒரு குழுவை நிர்வாகித்து வருகிறார்.

வயதான காரணத்தினால் பீல்டு ஏஜெண்டாக இல்லாமல் வேறு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வயதான பிறகும் மீண்டும் அவருக்கு அந்த விபத்து நடந்த பொழுது நடந்த ஒரு விஷயம் பிரச்சனையை ஏற்படுத்த துவங்குகிறது.

மேலும் காந்தி தனது மகன் இறந்ததாக நினைத்து கொண்டிருக்கையில் அவரும் உயிரோடு இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் உருவாகி இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்கு அப்போது பீல்டு ஏஜெண்டுகளாக பணிபுரிந்த பிரபுதேவா நடிகர் பிரசாந்த் மற்றும் விஜய் இவர்களெல்லாம் மீண்டும் ஒன்றிணைகின்றனர்.

இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து எப்படி திரும்ப இந்த பிரச்சனைகளை சரி செய்ய போகிறார்கள் என்பதே திரைப்படமாக இருக்கிறது. இந்த படத்தில் புதுப்புது கதாபாத்திரங்களில் நிறைய புதிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் முதல் ஷோ முடிந்த நிலையில் ஒரு பக்கம் அதிகமான வரவேற்பை இந்த படம் பெற்றிருக்கிறது. அதே சமயம் சிலர் கூறும் பொழுது ஜவான் திரைப்படத்திலும் இதே போல தான் கதை இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top