Connect with us

அந்த படம் ஓடலைனா இசையமைக்கிறதையே விட்டுடுறேன்!.. ரஜினிக்கு சவால் விட்ட இளையராஜா!..

Cinema History

அந்த படம் ஓடலைனா இசையமைக்கிறதையே விட்டுடுறேன்!.. ரஜினிக்கு சவால் விட்ட இளையராஜா!..

Social Media Bar

தமிழ் இசையமைப்பாளர்களில் இசையின் அரசன் என அழைக்கப்படுபவர் இளையராஜா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் பாடல்களாக கொடுத்தவர் இளையராஜா. அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி தொடர்ந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

இளையராஜா வளர்ந்து வந்ததில் அவரது தம்பி கங்கை அமரனுக்கும் முக்கிய பங்குண்டு. இளையராஜா மாதிரி இசையில் மட்டும் சிறந்தவராக கங்கை அமரன் இருக்கவில்லை, மாறாக பாடல் வரிகள் எழுதுவது, படம் இயக்குவது என அனைத்திலும் கலக்கி வந்தார் கங்கை அமரன்.

இருந்தாலும் தனது அண்ணன் இளையராஜா மூலமாகதான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதால் தொடர்ந்து அவர் இளையராஜாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கங்கை அமரனுக்கு வந்தது.

கங்கை அமரன் ஏற்கனவே இயக்குனராக சில வெற்றி படங்களை கொடுத்திருந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது இயக்குனர் சுந்தர் ராஜனுக்கு படவாய்ப்புகள் வாங்கி தருவதாக வாக்கு கொடுத்திருந்தார் இளையராஜா.

எனவே அந்த படத்திற்கான வாய்ப்பை சுந்தர் ராஜனுக்கு பெற்று தந்தார் இளையராஜா. ஆனால் அதில் ரஜினிகாந்திற்குமே பெரிதாக விருப்பம் இருக்கவில்லை. அவர் இளையராஜாவிடம் சென்று கங்கை அமரன் இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்கிறேனே என கூறினார். அதை கேட்டதும் இளையராஜா கோபமாகிவிட்டார்.

இந்த படத்தில் தைரியமாக நடியுங்கள். ஏனெனில் நான் சுந்தர் ராஜனுக்கு வாக்கு கொடுத்துள்ளேன். அப்படி படம் ஓடவில்லை என்றால் நான் ஆர்மினியத்தை தொடுவதையே விட்டுவிடுகிறேன் என கூறிவிட்டார். அதற்கு பிறகு ரஜினிகாந்தால் ஒன்றும் பேச முடியவில்லை. ஆனால் இளையராஜா சொன்னது போலவே அந்த திரைப்படம் நல்ல வெற்றியை தந்தது.

Articles

parle g
madampatty rangaraj
To Top