Connect with us

அந்த படம் முழுக்க ரகுவரன் முட்டி போட்டுதான் நடிச்சார்… உண்மையை உடைத்த ரேவதி!..

Cinema History

அந்த படம் முழுக்க ரகுவரன் முட்டி போட்டுதான் நடிச்சார்… உண்மையை உடைத்த ரேவதி!..

Social Media Bar

எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சரியாக நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் ரகுவரன். பலருக்கும் ஒரு வில்லனாக மட்டுமே ரகுவரனை தெரியும். ஆனால் அதையும் தாண்டி ஒரு நடிகனாக பல படங்களில் தூள் கிளப்பி இருப்பார் ரகுவரன்.

சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு குடும்ப தலைவனாக, விசுவின் மகனாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்கிற திரைப்படத்தில் மன நோயாளியான தனது மனைவிக்காக அவளது குழந்தையை தேடி அலையும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

 வில்லனாக நடிப்பதற்கு முன்பே இப்படி பல கதாபாத்திரங்களில் நடித்தவர் ரகுவரன். அஞ்சலி திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஞ்சலி திரைப்படம் எடுக்கும்போது மணிரத்தினத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.

பொதுவாகவே ரகுவரன் மிகவும் உயரமானவர். படத்தில் அவரை முழுமையாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு அதிக தூரத்தில் காமிராவை வைக்க வேண்டும். அஞ்சலி குழந்தைகள் சார்ந்த படம் என்பதால் குழந்தைகளைதான் அதிகம் காட்ட வேண்டி இருக்கும். ரகுவரன் வருகிற காட்சிகளில் குழந்தைகளை காட்டும்போது உயரம் காரணமாக ரகுவரனின் தலை தெரியாமல் போனது.

இதை புரிந்துக்கொண்ட ரகுவரன் படத்தில் அதிக காட்சிகளில் முட்டி போட்டு குழந்தைகளிடம் பேசியவாறே நடித்துள்ளார். இந்த நிகழ்வை நடிகை ரேவதி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top