Connect with us

நீங்க எல்லாம் சாந்தமான ஆளு.. நான் தான் கோபக்காரன்.. கடுப்பான இளையராஜா..!

Tamil Cinema News

நீங்க எல்லாம் சாந்தமான ஆளு.. நான் தான் கோபக்காரன்.. கடுப்பான இளையராஜா..!

Social Media Bar

இசைஞானி இளையராஜா தொடர்ந்து இசை கச்சேரிகளை அதிகமாக நடத்தி வருகிறார். சினிமாவில் பாடல்களுக்கு இசையமைப்பதை விடவும் இசை கச்சேரிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இளையராஜாவின் இசை கச்சேரிகளுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு முழுவதுமே வெவ்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் ஜூன் 14ஆம் தேதி புதுச்சேரியிலும் அதே மாதிரி கச்சேரி நடந்தது புதுச்சேரியில் நடந்த கச்சேரியில் ஜனனி ஜனனி, தென்றல் வந்து தீண்டும் போது போன்ற பல பாடல்களை பாடி இருந்தார் இளையராஜா.

இந்த நிலையில் ரசிகர்கள் எப்பொழுதுமே இளையராஜா மிகவும் கோபக்காரர் என்ற விமர்சனத்தை வைத்து வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல புதுச்சேரியில் நடந்த கச்சேரியில் கங்கை அமரன் சொர்க்கமே என்றாலும் பாடலை பாடும் பொழுது டிரம்ஸ் இசை சரியாக வரவில்லை.

அதற்காக இளையராஜா கோபித்துக் கொண்டார் மேலும் அவர் கோபப்படுவது குறித்து அந்த மேடையில் பேசியிருந்தார் அதில் இளையராஜா கூறும் பொழுது நான் ஏதாவது சொன்னா உடனே இளையராஜா ரொம்ப கோபப்படுகிறார் என்று சொல்றீங்க நீங்க எல்லாம் ரொம்ப சாந்தமான ஆட்கள் கோபப்படவே மாட்டீங்க என்று இளையராஜா கிண்டலாக பதில் அளித்து இருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top