News
இயக்குனர், கேமிரா மேனை கூட விடுறதில்லை.. ஜெயம் ரவி மனைவியின் செயல்.. இதுதான் விவாகரத்துக்கு காரணமா?
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே விவாகரத்து நடக்கப் போகிறது என்பதுதான் தற்சமயம் அதிகமாக சினிமாவில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கின்றன. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார்.
ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களுக்கு சினிமாவில் அதிக வரவேற்புகள் இருந்து வந்தன. ஆனால் போக போக அவரது திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது சினிமாவில் குறைய துவங்கியது. முக்கியமாக சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.
ஜெயம் ரவி விவாகரத்து:
இதுதான் இவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போவதற்கான முக்கிய காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் ஆர்த்தி அம்மாதான் ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் ஒழுங்காக ஓடவில்லை இதனால் விரக்தி அடைந்த ஆர்த்தியின் தாய் ஜெயம் ரவியின் சம்பளத்தை குறைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதிலிருந்துதான் முதல் பிரச்சனையே ஆரம்பமானது என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து பத்திரிகையாளர்கள் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி அதிகமாக செலவு செய்யக்கூடியவர். மிகவும் காஸ்ட்லியான பொருட்களைதான் பயன்படுத்துவார். அதனால்தான் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு பிரிகிறார் என்று கூறுகின்றனர்.
ஆர்த்தியின் செயல்:
ஆனால் இது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சுவாரஸ்யமான ஒரு செய்தியை கூறியிருந்தார். அதாவது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிகமாக சந்தேக குணம் கொண்டவர். ஜெயம் ரவி எந்த படப்பிடிப்பிற்கு சென்றாலும் அந்த படப்பிடிப்பிற்கு போன் செய்து விடுவார் ஆர்த்தி.

ஜெயம் ரவி போனை எடுக்கவில்லை என்றால் அங்கு இருக்கும் கேமராமேன், இயக்குனர், உதவி இயக்குனர் என்று ஒரு ஆளை விட்டு வைக்க மாட்டார் அனைவருக்கும் போன் செய்து ஜெயம் ரவி எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொள்வார். இப்படி தொடர்ந்து இவர் செய்து வந்த தொல்லைகள் காரணமாகத்தான் ஜெயம் ரவி விவாகரத்துக்கு முன் வந்திருக்கிறார் என்று கூறுகிறார் அந்தணன்.
