Tamil Cinema News
வாழ்க்கையே வெறுத்து போச்சு.. மனம் வருந்தும் ஜெயம் ரவி.. எப்படி இருந்த மனுஷன்..!
ஜெயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமே தமிழ் சினிமாவில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதற்கு பிறகு அவர் நடித்த எம்.குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என வரிசையாக அப்போது வெற்றி படங்களை கொடுத்து வந்தார் ஜெயம் ரவி. ஆனால அவ்வளவுக்கும் மாற்றாக இப்போது தொடர்ந்து அவர் தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார்.
மேலும் சொந்த வாழ்க்கையிலும் கூட அவருக்கு அவ்வளவு சுமூகமான வாழ்க்கை அமையவில்லை. ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார் ஜெயம் ரவி. ஆனால் பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவியை விட்டு பிரிந்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் தனது தொடர் தோல்வி திரைப்படங்கள் குறித்து அவர் சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது தோல்வி என்பது யாருக்குமே நிரந்தரம் இல்லை.
2014 ஆண்டுகளில் எனக்கு படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து வந்தன.அதற்கு பிறகு நான் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அந்த சமயத்தில் ஒரே திரைப்படத்தில் மூன்று வருடங்களாக நடித்து வந்தேன். அப்போதைய சமயத்தில் எந்த படமும் நன்றாக போகவில்லை.
என் தரப்பில் என்ன தவறு உள்ளது. எதனால் எனது திரைப்படங்கள் ஓடுவதில்லை என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு எனக்கு வெற்றி படமாக இருந்தது.
2015 ஆம் ஆண்டு தனி ஒருவன்,ரோமியோ ஜூலியட், பூலோகம் என மூன்று படங்களுமே பெரும் வெற்றியை பெற்று கொடுத்தன. தோல்விக்கும் வெற்றிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் கீழே விழுவது தோல்வி கிடையாது.
ஆனால் மீண்டும் எழாமல் இருந்தால்தான் அது தோல்வி என கூறியுள்ளார் ஜெயம் ரவி. எனவே இந்த வருடம் நான் மீண்டும் எழுந்துவிடுவேன். அதற்கான நல்ல கதைகளையும் ,திறமையான இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்துள்ளேன் என கூறியுள்ளார் ஜெயம் ரவி.