Tamil Cinema News
பெரிய நடிகர்களால் ஏற்பட்ட மன உளைச்சல்.. கவலையில் இருக்கும் காஜல் அகர்வால்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் நடித்து வந்த காலகட்டங்களில் தமிழில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது பிறகு திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.
பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேட துவங்கினார் காஜல் அகர்வால். ஆனால் சமீப காலமாகவே அவருக்கு பட வாய்ப்புகளில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் ஆச்சார்யா என்கிற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. நிறைய காட்சிகளும் இருந்தது. ஆனால் நடிக்க இருந்த கடைசி நேரத்தில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டனர்.
அதற்குப் பிறகு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் நிறைய காட்சிகள் அவர் நடித்தார். ஆனாலும் படத்தில் குறைவான காட்சிகளை இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்தார் காஜல் அகர்வால்.
ஆனால் இந்தியன் மூன்றாம் பாகம் வர இருப்பதால் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வாலுக்கு எந்த காட்சிகளும் வரவில்லை மேலும் மூன்றாவது பாகமும் வெளிவருமா என்பது சந்தேகத்திற்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
இப்படி சமீபகாலமாக காஜல் அகர்வால் நடித்த படங்கள் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் அவற்றின் மூலமாக காஜல் அகர்வாலுக்கு ஒரு மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை. அதனால் மன வருத்தத்தில் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.
