எல்லாத்துக்கும் சேர்த்து அழ விட்டுட்டார்.. கமல்ஹாசனை கண் கலங்க வைத்த இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முக்கியமான இடத்தை பிடித்தவராக நடிகர் கமல்ஹாசன் இருப்பார். நடிகர் கமல்ஹாசன் நடித்த பல்வேறு திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமானவை என்று கூறலாம்.

அவர் நடித்த ஹேராம் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இந்திய அளவிலேயே பெரிய பெரிய நடிகர்களை வாய் பிழக்க வைக்கும் திரைப்படங்கள் என்று கூறலாம்.

அப்படியான வரிசையில் நாயகன் திரைப்படம் மிக முக்கியமான ஒரு திரைப்படம் ஆகும். நாயகன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட இயக்குனர் மணிரத்தினத்திற்கும் கமல்ஹாசனுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்த திரைப்படமாக அது இருக்கிறது.

Social Media Bar

இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கமல்ஹாசனின் மகன் இறக்கும் காட்சி ஒன்று நாயகன் திரைப்படத்தில் வரும்.

அந்த காட்சியில் நன்றாக அழ வேண்டும் என்பதற்காக தயாராக இருந்தாலும் கமலஹாசன் அந்த சமயத்தில் ஃபிலிம் ரோல் தீர்ந்துவிட்டது என்று கூறி படப்பிடிப்பை நிறுத்தி இருக்கின்றனர்.

இது கமல்ஹாசனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த காட்சிக்காக கண்ணீர் விட்டு அழ தயாரான பிறகு படப்பிடிப்பை எப்படி நிறுத்தலாம் என்று கூறி என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பிலிம் ரோலை கொண்டு வந்து அன்றைய காட்சியை படமாக்கினேன்.

அப்பொழுது என்னுடைய அழுகை மிகத் தத்ரூபமாக இருப்பதை பார்த்து மணிரத்தினம் என்னிடம் கேட்டார். அப்பொழுது நான் இந்த படப்பிடிப்பில் நடந்த கூத்துகளுக்கும் சேர்த்து தான் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று கூறினேன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் கமல்ஹாசன்.