Connect with us

நான் ஆசைப்பட்டு வந்தது ஒன்னு!.. ஆனா குடும்பமே என் கனவை கலைச்சிட்டாங்க!.. ஓப்பனாக கூறிய கார்த்தி..

karthi

Cinema History

நான் ஆசைப்பட்டு வந்தது ஒன்னு!.. ஆனா குடும்பமே என் கனவை கலைச்சிட்டாங்க!.. ஓப்பனாக கூறிய கார்த்தி..

Social Media Bar

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கார்த்தி. கார்த்தி நடித்த முதல் படமான பருத்தி வீரன் திரைப்படமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வரிசையாக படம் நடித்த கார்த்தி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதிலும் தற்சமயம் அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என அனைத்து திரைப்படங்களுமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தற்சமயம் அவரின் 25 ஆவது திரைப்படமான ஜப்பான் படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆரம்பத்தில் சினிமாவிற்கு வர வேண்டும் என்கிற ஆசையே கார்த்திக்கு கிடையாது. அவர் அமெரிக்காவிற்கு சென்று எம்.பி.ஏ படித்துவிட்டு ஒரு நிறுவனத்திற்குதான் வேலைக்கு செல்ல இருந்தார், ஆனால் தினமும் 8 மணிநேரம் வேலை பார்ப்பதை விடவும் கொஞ்சம் சுவாரஸ்யமான வேலையை பார்த்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.

எனவே இந்தியாவிற்கு வந்த கார்த்தி இயக்குனர் ஆகலாம் என முடிவு செய்தார். எனவே மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் அவர் இயக்குனராவதை விட நடிகரானால் நன்றாக இருக்கும் என்று கருதினார்கள். எனவே அவர்களும் மணிரத்தினமும் சேர்ந்து கார்த்தி கனவை கலைத்து அவரை நடிகனாக்கி விட்டனர்.

இந்த விஷயத்தை கார்த்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

To Top