News
சம்பள விஷயத்துல என்னையவே ஏமாத்திட்ட நீ!.. கவுண்டமணியை ஏமாற்றிய கே.எஸ் ரவிக்குமார்!..
தமிழ் சினிமா நடிகர்களில் காமெடி நடிகராக பெரிதும் வரவேற்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. பெரும்பாலும் கவுண்டமணி நடிக்கும் திரைப்படங்களில் அவரது காமெடிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.
தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. கவுண்டமணி கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பொதுவாக கே.எஸ் ரவிக்குமார் படங்களில் நடிக்கும்போது நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குவார் கவுண்டமணி. ஒரு வேளை அந்த கதாபாத்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் நாள் கணக்கில் இல்லாமல் ஒரு படத்துக்கு இவ்வளவு என வாங்கி கொள்வார்.

இந்த நிலையில் நாட்டாமை திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரம்தான் என கூறிய கே.எஸ் ரவிக்குமார் நாள் சம்பளத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்தார். நான்கே நாட்களில் படப்பிடிப்பை முடித்து அனுப்பினார்.
ஆனால் படம் வெளியாகும்போது பார்த்தால் படம் முழுக்கவே கவுண்டமணி இருப்பார். அதனை பார்த்து ஷாக்கான கவுண்டமணி என்னையே ஏமாத்திட்டிலே நீ இனிமே உன் படத்தில் நாள் சம்பளத்தில் நடிக்க மாட்டேன்பா என கூறியுள்ளார்.
