Tamil Cinema News
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அடுத்த படம்.. ராஜமௌலியின் பட பூஜை நடந்தது..!
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும்.
ஆனால் அவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்துவிடும் என்பதால் பல நடிகர்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு அவரிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஆனால் ராஜமௌலி தொடர்ந்து தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ராஜமௌலி. இந்த திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.
இந்த படம் முழுக்க முழுக்க அமேசான் காடுகளில் எடுக்கப்படும் சாகச படமாக இருக்கும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகிறது. வருகிறா 2027 ஆம் ஆண்டு முதல் பாகமும் 2029 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.