Cinema History
விக்ரம் படத்தோட முதல் காட்சி எடுக்கும்போது ஒரு அதிசயம் நடந்துச்சு! – உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்!
நடிகர் கமலின் மிகப்பெரிய ரசிகராக இருந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்து வந்தாலும் சின்ன வயது முதலே அவர் விரும்பி பார்த்தது கமல்ஹாசனின் திரைப்படங்கள்தான்.
இதுதான் இருவரையும் இணைந்து விக்ரம் திரைப்படத்தை செய்ய வைத்தது. விக்ரம் திரைப்படத்தில் கமலின் பழைய படங்களில் இருந்து பல விஷயங்களை எடுத்து வைத்திருப்பார் லோகேஷ். முக்கியமாக அவர் கமலிடம் ரசித்த விஷயங்கள் அதில் இருக்கும்.
கமலை வைத்து விக்ரம் எடுப்பதற்கு உறுதியான பிறகு ஒரு வழியாக படப்பிடிப்பிற்கான நாளும் வந்தது. படத்தின் முதல் படப்பிடிப்பை ஏ.வி.எம்மில் படம் பிடிக்க திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ். எனவே ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு கமல்ஹாசனை 9 மணி வாக்கில் வர சொல்லியிருந்தார் லோகேஷ்.
கமலும் அந்த நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சேர்ந்தார். ஏ.வி.எம்மில் பல தளங்கள் உள்ளன. அதில் குறிப்பிட்ட ஒரு தளத்திற்கு கமலை வர சொன்னார் லோகேஷ். அங்கு சென்ற கமலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே அவர் லோகேஷை அழைத்து ஏ.வி.எம்மில் ஏதாவது செண்டிமெண்ட் என கூறி இந்த தளத்தை கொடுத்தார்களா? என கேட்டுள்ளார்.
இல்லை சார்! நாந்தான் தேர்ந்தெடுத்தேன் ஏன் கேக்குறீங்க்? என லோகேஷ் கேட்டுள்ளார். இல்லை பழைய விக்ரம் திரைப்படம் எடுக்கும்போதும் அதன் முதல் காட்சியை இதே தளத்தில்தான் எடுத்தோம் என கூறியுள்ளார் கமல். அதை கேட்ட லோகேஷ் கனகராஜுக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது.