Tamil Cinema News
நயன்தாரா அனுமதி கொடுக்கலைனா அது நடந்திருக்காது.. உண்மையை உடைத்த நடிகர் மணிகண்டன்.!
ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் மணிக்கண்டன். அதற்கு முன்பே மணிகண்டன் விக்ரம் வேதா, ககக போ ஆகிய திரைப்படங்களில் எல்லாம் நடித்து வந்துள்ளார்.
சொல்லப்போனால் மிகவும் போராடிதான் மணிகண்டன் நடிப்பதற்கான வாய்ப்பையே பெற்றார். ஜெய் பீம் திரைப்படத்தில் சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் கூட மணிகண்டனின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
மேலும் மணிகண்டன் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு குட் நைட், லவ்வர் மாதிரியான திரைப்படங்களில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் அவருடைய நடிப்பில் நான்காவது திரைப்படமாக குடும்பஸ்தன் திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் தனது பழைய நினைவு ஒன்றை பகிர்ந்துள்ளார் மணிகண்டன். அதில் அவர் கூறும்போது ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்து வந்த அதே சமயத்தில்தான் நான் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்திலும் பணிப்புரிந்து வந்தேன்.
ஆரம்பத்தில் இயக்குனர் ஞானவேல் அழைத்தப்போது படம் நடிக்க அழைக்கிறார் என்றே தெரியாது. பிறகுதான் நான் ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பண்ண வேண்டும் என கூறினார் ஞானவேல்.
நான் இதுக்குறித்து நயன்தாரா மேடமிடம் கேட்டேன். அதன் பிறகு நயன்தாரா மேம் எனக்கு அனுமதி கொடுத்து 20 நாட்களில் நான் நடித்துக்கொடுத்த படம்தான் ஜெய் பீம் என கூறியுள்ளார் மணிகண்டன்.
