Dhanush : மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். 10 இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் இருக்கும் ஒரு குழிக்குள் மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒன்பது பேரும் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் கதையாக இருக்கிறது.
படத்தில் குணா குகையாக இருக்கட்டும், படத்தின் தயாரிப்பாக இருக்கட்டும் அனைத்தையும் அட்டகாசமாக செய்திருந்தார் இயக்குனர். படத்திற்கு சென்று அமர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாத அளவிற்கு படம் வேகமாக செல்வதால் இந்த படத்தின் மீது பலருக்கும் நல்ல மரியாதை ஏற்பட்டுள்ளது.
manjummel boys
இதனால் இந்த திரைப்படம் நல்ல வெற்றியும் கண்டிருக்கிறது இந்த நிலையில் திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரத்தை வைத்து திரைப்படம் நடிக்க வேண்டும் என்று தமிழ் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஆசைப்பட துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் இது குறித்து இயக்குனர் சிதம்பரத்திடம் பேசி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் இடையே மீட்டிங் நடந்துள்ளது. இதில் பேசிய தனுஷ் யாரடி நீ மோகினி திரைப்படம் மாதிரியான ஒரு காதல் கதையை தனுசை வைத்து சிதம்பரம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தை சிதம்பரத்திடமும் கூறியிருக்கிறார் ஆனால் எடுத்த உடனேயே ஒரு பெரிய நடிகரை வைத்து தமிழில் படம் இயக்குவதற்கு யோசித்து வருகிறார் சிதம்பரம். ஏனெனில் கேரளா மார்க்கெட்டை விடவும் தமிழ் சினிமா மார்க்கெட் மிகவும் பெரிதாக இருப்பதால் இதில் பயங்கரமான வெற்றியை கொடுக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை தான் எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் சிதம்பரம்.
எனவே மலையாளத்தில் இன்னும் ஒரு படம் எடுத்துவிட்டு தமிழ் கலாச்சாரத்திற்கு தகுந்தார் போல ஒரு கதையை யோசித்து விட்டு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் சிதம்பரம். ஏனெனில் தமிழ் கலாச்சாரம் பற்றி பெரிதாக தனக்கு அறிவில்லை என்பதால் அது தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறார் சிதம்பரம். தனுஷும் இதற்கு ஒப்பு கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.