Connect with us

வீட்டு வாசலில் வந்து வாய்ப்பு கேட்ட பையனை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர்!.. எந்த நடிகர் தெரியுமா!..

mgr 1

Cinema History

வீட்டு வாசலில் வந்து வாய்ப்பு கேட்ட பையனை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர்!.. எந்த நடிகர் தெரியுமா!..

cinepettai.com cinepettai.com

Puratchi Thalaivar MGR :  தமிழ் சினிமாவில் மக்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர் என்றால் அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். இதுவரை தமிழ் சினிமாவில் அவருக்கு இருந்த அளவிலான ரசிக பட்டாளம் வேறு யாருக்குமே இல்லை என்று கூறலாம்.

எம்.ஜி.ஆரை பற்றி அவரை சுற்றி உள்ளவர்கள் கூறும்போது உதவி என வருபவர்களுக்கு இல்லை என கூறாமல் உதவுபவர் என கூறுவார்கள். இப்படி பலருக்கும் பல நன்மைகளை செய்து வந்தார் எம்.ஜி.ஆர். அதனாலேயே எளிதாக அரசியலில் அவரால் இடம் பிடிக்க முடிந்தது.

எவ்வளவோ மூத்த அரசியல் தலைவர்கள் பல வருடங்கள் அரசியலில் இருந்தும், அவர்களை தாண்டிய புகழை எம்.ஜி.ஆருக்கு சினிமா பெற்று தந்தது. எம்.ஜி.ஆரை தேடி அடிக்கடி பலர் வாய்ப்பு கேட்டு வருவது வழக்கமாக இருந்தது.

அவர்களை எல்லாம் ஏதேனும் இயக்குனர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டுக்கொள்ள சொல்வார் எம்.ஜி.ஆர். அப்படியாக ஒரு நாள் வித்தியாசமான இளைஞன் ஒருவன் வந்து எனக்கு வாய்ப்பு வேண்டும் என கேட்டான். நடிகனாக வாய்ப்பு கேட்கிறாயே நன்றாக நடிப்பாயா என எம்.ஜி.ஆர் கேட்க அங்கேயே பாடி கொண்டு ஆட துவங்கினான் அந்த இளைஞன்.

அதை பார்த்த எம்.ஜி.ஆர், தம்பி நான் எல்லாம் வாய்ப்பு தர முடியாது. எனவே இயக்குனர்களிடம் வாய்ப்பு கேள் என்று கூறியவர் அந்த இளைஞனின் பெயரை கேட்டார். அந்த இளைஞன் சந்திரபாபு என கூறினான். அதற்கு பிறகு படப்பிடிப்பு தளம் வரை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் அவரை பின்பற்றி வந்தார் சந்திரபாபு.

அங்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் என்.எஸ் கிருஷ்ணனை சந்தித்து ஒரு இளைஞனை காலையில் சந்தித்தேன் நன்றாக நடிக்கிறான், அவனுக்கு வாய்ப்பளித்தால் நன்றாக இருக்கும் என கூறி கொண்டு இருக்கும்போதே அந்த பக்கம் சந்திரபாபு சென்றுக்கொண்டிருந்தார்.

நீ எப்படி உள்ளே வந்தாய் என எம்.ஜி.ஆர் கேட்க, நீங்கள் என்னை அழைத்ததாய் கூறி உள்ளே வந்தேன் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதனையடுத்து என்.எஸ் கிருஷ்ணன் ஒரு காட்சியை சொல்லி அதை நடித்து காட்டுமாறு கூறியுள்ளார். அதை அங்கேயே நடித்து காட்டி அசத்தி வாய்ப்பை வாங்கினார் சந்திரபாபு.

ஆனாலும் அவரை என்.எஸ் கிருஷ்ணனிடம் கை காட்டிவிட்டது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

POPULAR POSTS

ajith
gaundamani mirchi siva
aadukalam naren mysskin
annamalai vishal
mankatha
top cook dupe cook
To Top