Connect with us

என்ன தாண்டி உங்கள யார் தூக்குறான்னு பாக்குறேன்! – ராமராஜனுக்காக களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர்!

Cinema History

என்ன தாண்டி உங்கள யார் தூக்குறான்னு பாக்குறேன்! – ராமராஜனுக்காக களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர்!

cinepettai.com cinepettai.com

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த பல படங்கள் கிராம மக்களில் துவங்கி நகர மக்கள் வரை அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு சாதரண மனிதராக இருந்து, எந்த ஒரு உதவியும் இல்லாமல் சினிமாவில் உச்சத்தை தொட்டவர் நடிகர் ராமராஜன். சினிமாவிற்கு முதலில் வந்தப்போது இயக்குனர் ஆக வேண்டும் என்னும் ஆசையில்தான் இவர் சினிமாவிற்கு வந்தார்.

ஆனால் நாளடைவில் ஹீரோ ஆவதற்கான வாய்ப்பு கிடைத்ததால் ஹீரோ ஆகிவிட்டார். அதற்கு முன்னர் இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் ராமராஜன். ராம நாராயணன் இயக்குனராக இருந்த காலத்தில் நடிகை நளினி மிகவும் பிரபலமானவராக இருந்தார்.

அப்போது ஒரு படத்தில் பணிப்புரியும்போது ராம ராஜனுக்கு நளினி மேல் காதல் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த விஷயம் நளினிக்கும் தெரியவே அவருக்கும் ராமராஜன் மீது விருப்பம் இருந்துள்ளது. இந்த நிலையில் ராமராஜன் பெண் கேட்டு நளினி வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டில் இருவரது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் இருவரும் ஓடி போய் திருமணம் செய்துக்கொண்டனர். பெண் வீட்டார் இந்த ஜோடியை தேடி கொண்டிருக்க, இந்த சமயத்தில் செய்தி எம்.ஜி.ஆரிடம் சென்றுவிட்டது. உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து வரவேற்பிற்கு ஏற்பாடு செய்தார்.

வரவேற்பில் பேசும்போது இவர்கள் இருவருக்கும் நான் ஆதரவு அளிக்கிறேன். என்ற ஒரு வார்த்தை மட்டுமே கூறினார் எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு அந்த ஜோடிகளை யாரும் எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆரின் செல்வாக்கு என்னவென்பதை இந்த செயல் மூலம் அவர் வெளிப்படுத்தினார்.

To Top