Tamil Cinema News
படப்பிடிப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாநாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா. அதே சமயம் நயன்தாரா தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் தொடர்பாக பேசப்பட்டு கொண்டே இருக்க முடியும்.
படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார். படப்பிடிப்பு தளங்களில் நிறைய விதிமுறைகள் போடுவார் என்று எல்லாம் நயன்தாரா குறித்து பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் உண்டு.
ஆனால் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் மட்டும் நயன்தாராவின் செயல்பாடுகள் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக படங்களுக்காக நடக்கும் பூஜை நிகழ்ச்சிகள் இசை வெளியீட்டு விழா வெற்றி விழா மாதிரியான எந்த ஒரு விஷயத்திலும் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார்.
ஆனால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பூஜை துவங்கிய பொழுது அதில் நயன்தாரா இருப்பதை பார்க்க முடிந்தது. அதேபோல படப்பிடிப்பு தளங்களிலும் நயன்தாரா அவருக்கான காட்சிகள் எடுக்கப்பட்ட பின் வேக வேகமாக சென்று கேரவனில் அமர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
ஆனால் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் அவருக்கான காட்சி முடிந்தாலும் மற்ற படப்பிடிப்புகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது பெரும்பாலும் நயன்தாரா புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் பொழுது இயக்குனர்களை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது.
அதனால் அவர் இஷ்டத்திற்கு இருப்பார் ஆனால் சுந்தர் சியிடம் என்னும் பொழுது நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர்சி என்பதால் அவரது பேச்சைக் கேட்டு நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
