Connect with us

அடப்பாவி எம்.ஜி.ஆர்கிட்ட ஏண்டா ஆசீர்வாதம் வாங்குன? –  திரைக்கு வந்த போது ராதா ரவியை கலாய்த்த எம்.ஆர். ராதா!

Cinema History

அடப்பாவி எம்.ஜி.ஆர்கிட்ட ஏண்டா ஆசீர்வாதம் வாங்குன? –  திரைக்கு வந்த போது ராதா ரவியை கலாய்த்த எம்.ஆர். ராதா!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் இருந்தே பிரபலமாக இருந்த சில நடிகர்கள் உண்டு. அப்படி பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம் ஆர் ராதா.

அப்போதைய நடிகர்களில் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை தரக்கூடிய ஒரு நடிகராக எம்.ஆர் ராதா இருந்தார். எம்.ஆர் ராதா வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்கும் பல திரைப்படங்கள் அப்போது வெற்றி அடைந்தன. அவர் நடிக்கிறார் என்பதற்காகவே அந்த படத்தை பார்க்க ஒரு கூட்டம் வந்தது.

அதிகமான ஒரு நகைச்சுவை திறன் கொண்டவர் நடிகர் எம் ஆர் ராதா. அதனால் தான் ஆரம்பத்தில் வில்லனாக அவர் நடித்திருந்தாலும் போகப் போக பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி போன்ற சில திரை பிரபலங்கள் மீது எம் ஆர் ராதாவுக்கு வெறுப்பு இருந்தது. எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி திரையில் நாயகனாக நடிக்க துவங்கிய பொழுது தன் தந்தையிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

அப்போது “அப்பா என்னை ஆசீர்வதியுங்கள்” என ராதாரவி கூறினார். நான் ஆசீர்வதித்தால் எல்லாம் நீ பெரிய ஆளாக முடியாது, உன் திறமையை வைத்து தான் நீ பெரிய ஆளாக முடியும் என கூறினார் எம் ஆர் ராதா.

அப்போது ராதாரவி எம் ஆர் ராதாவிடம் நான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜியிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன் எனக் கூறினார். நான் திரையில் வில்லனா நடிச்சவன் எங்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினால் ஆசீர்வதிப்பேன் அவர்கள் எல்லாம் ஹீரோவாக நடித்தவர்கள் அவர்கள் எப்படி உன்னை ஆசீர்வதிப்பாங்க என நக்கலாககேட்டுள்ளார் எம் ஆர் ராதா.

ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை நடிகர் ராதாரவி பகிர்ந்துள்ளார்.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top