Connect with us

300 ரூபாய் காசா இருந்தாலும் விட மாட்டேன்!.. கோர்ட்டுக்கு போய் வழக்கு போட்ட எம்.ஆர் ராதா!..

MR radha

Cinema History

300 ரூபாய் காசா இருந்தாலும் விட மாட்டேன்!.. கோர்ட்டுக்கு போய் வழக்கு போட்ட எம்.ஆர் ராதா!..

Social Media Bar

Actor MR Radha : எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் எல்லாம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே தனியாக நாடக கம்பெனி நடத்தி அதில் பெரிய ஆளாக இருந்து வந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. அதனால்தான் எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு எம்.ஆர் ராதாவுக்கு இருந்த போதும் கூட திரும்ப அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த அளவிற்கு செல்வாக்கு பெற்ற ஒரு நபராக எம்.ஆர் ராதா இருந்தார் எம்.ஆர் ராதா சினிமாவிலும் சரி நாடகத்திலும் சரி பண விஷயத்தில் மிகச் சரியாக இருப்பார். ஒருவருக்கு எந்த தொகை கொடுப்பதாக கூறினாரோ அந்த தொகையை சரியாக கொடுத்து விடுவார்.

அதேபோல அவருக்கும் பேசும் சம்பளத்தை மற்றவர்கள் சரியாக கொடுத்து விட வேண்டும். இதில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மின்சார மாயவன் என்கிற படத்தில் எம்.ஆர் ராதா நடித்த பொழுது அவருக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகை 500 ரூபாய் ஆனால் அவருக்கு கொடுத்ததோ 200 ரூபாய்தான்.

இதை எம்.ஆர் ராதாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை திரும்ப அந்த மீத சம்பளத்தை கேட்டு அவர் பேசிய பொழுது இதற்கு மேல் சம்பளம் தர முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோபமான எம்.ஆர் ராதா நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடுத்தார்.

இதற்காக வழக்கு தொடுத்ததினால் அவருக்கு கிட்டத்தட்ட 200 ரூபாய் வரை செலவானது. இருந்தாலும் அந்த செலவை செய்து அந்த 300 ரூபாயை பெற்றார் எம்.ஆர் ராதா. அந்த 300 ரூபாய் அவருக்கு ஒரு விஷயம் கிடையாது தன்னை ஏமாற்றியவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம் ஆர் ராதா அதை செய்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top