Connect with us

படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…

Cinema History

படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…

Social Media Bar

தமிழ் சினிமா இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு தனியான இடம் உண்டு. சினிமாவில் காட்சி படுத்தும் விதம் என்பது அனைத்து இயக்குனருக்கும் சரியாக வந்துவிடாது. ஆனால் மணிரத்னம் அதனை சிறப்பாக செய்வார். ரோஜா, நாயகன், தளபதி போன்ற பல படங்களில் அவரது காட்சி அமைப்புகள் சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடியும்.

இதனால் மணிரத்னத்திற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரமே உண்டு என கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட மணிரத்னத்தை இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் பங்கம் செய்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். முக்தா ஸ்ரீனிவாசன்தான் நாயகன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் இந்த நாயகன் படத்தின் உருவாக்கம் குறித்து சில செய்திகளை பகிர்ந்துள்ளார். நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு சம்பளமாக 20 லட்சம் முடிவு செய்ப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் கதாநாயகனுக்கு 20 லட்சம் செலவு செய்தால் படம் ஒரு கோடிக்கு ஓட வேண்டும். அப்படி ஓடினால்தான் படம் ஹிட் என அர்த்தம்.

ஆனால் நாயகன் திரைப்படம் படு தோல்வியை கண்டது. மேலும் படப்பிடிப்பை 30 நாட்களில் முடிப்பதாக கூறிய மணிரத்னம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிக நடிகர்களை படத்தில் இறக்கி அனைவருக்கும் சம்பளம் கொடுத்து படத்தின் தயாரிப்பு செலவையும் அதிகரித்துவிட்டுள்ளார்.

மொத்தத்தில் படப்பிடிப்பு குறித்து பெரிதாக எதுவுமே தெரியாமல்தான் நாயகன் படத்தை அவர் இயக்கினார் என கூறப்படுகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவரும் தயாரிக்கிறார் என்றவுடன் அதை மட்டும் குறைந்த செலவில் எடுத்து முடித்து விட்டார் என மணிரத்னம் குறித்து கூறியிருந்தார் முக்தா ரவி.

Articles

parle g
madampatty rangaraj
To Top