Latest News
மிஸ்கின் இயக்கத்தில் அடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி!.. இன்னும் எடுத்த படமே வரலை!..
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஸ்கின். அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு மிஸ்கினின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் வர துவங்கின. இதனை தொடர்ந்து அவர் இயக்கிய பிசாசு, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் சில நாட்களாக படம் இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிக்க துவங்கினார் மிஸ்கின். அப்படி அவர் நடித்த மாவீரன், லியோ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. ஆனால் இதற்கு நடுவே அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை வெகுநாட்களாக எடுத்து வந்தார்.
இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து படமெடுக்க இருக்கிறார் மிஸ்கின் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற 24 ஆம் தேதி இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன. இன்னும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமே வராத நிலையில் மிஸ்கின் என்ன அடுத்த படத்திற்கு தாவி விட்டாரே என இதுக்குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி காம்போ எனும்போது நிச்சயம் இது சிறப்பான விளையாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.