Cinema History
வீட்டுக்குள்ளேயே கைதான வேலைக்காரர்கள்!. ரஜினியின் கேளம்பாக்கம் வீட்டில் உள்ள மர்மம்?..
சமீபத்தில் ஆடுஜீவிதம் என்கிற ப்ரித்திவிராஜ் திரைப்படம் ஒன்று வெளிவந்ததை பலரும் பார்த்திருப்போம். அதில் ஆடு மேய்ப்பதற்காக பாலைவனத்திலேயே அடைத்து வைக்கப்படும் மனிதர்களை பற்றி கதை செல்லும்.
இதே போல ரஜினிகாந்தின் பங்களாவிலும் கூட ரகசியமான சில சம்பவங்கள் நடந்து வருகின்றன என்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப். கேளம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது.
அந்த பங்களா ஒரு மர்மமான பங்களா என கூறப்படுகிறது. வெளி உலகிற்கு தெரியாத பல விஷயங்களை ரஜினிகாந்த் அங்கு செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அந்த பங்களாவை பார்த்துக்கொள்ள ஒரு வேட்டை நாயும் சில வேலைக்காரர்களையும் வைத்துள்ளாராம் ரஜினிகாந்த்.
இந்த வேட்டை நாயை இரவுகளில் பங்களாவில் சுற்றி வர விட்டுவிடுவார்களாம். யார் வந்தாலும் அந்த நாயிடம் இருந்து தப்பிப்பது கடினம். அதே போல அவருக்கு தெரிந்த வி.ஐ.பிகள் மூலம் நம்பகமான வேலையாட்களை பணிக்கு அமர்த்துவார் ரஜினி.
அந்த வேலையாட்கள் மூன்று வருடம் அந்த பங்களாவில் வேலை செய்வார்கள். அதன் பிறகு மூன்று வருடம் கழித்து அவர்களுக்கு ஒரு பெரிய தொகை செட்டில்மெண்டாக கொடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த மூன்று வருடங்களும் இவர்கள் யாருமே பங்களாவை விட்டு வெளியே செல்ல முடியாதாம்.
இந்த விஷயத்தை சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Source – Link