Connect with us

மக்களுக்கு படம் பிடிக்கலைனா அது அவங்க பிரச்சனை!.. எனக்கு பிடிச்ச மாதிரிதான் படம் எடுப்பேன்!.. ஓப்பனாக கூறிய பா.ரஞ்சித்!..

pa ranjith

News

மக்களுக்கு படம் பிடிக்கலைனா அது அவங்க பிரச்சனை!.. எனக்கு பிடிச்ச மாதிரிதான் படம் எடுப்பேன்!.. ஓப்பனாக கூறிய பா.ரஞ்சித்!..

Social Media Bar

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் பா.ரஞ்தித். இவர் இயக்கும் திரைப்படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகவே அமைந்துள்ளன. மற்ற இயக்குனர்களை போல வெறுமனே படங்களை மட்டும் எடுக்காமல் சமூகம் சார்ந்த அரசியலை அதில் பேசியிருப்பார் பா.ரஞ்சித்.

தற்சமயம் அவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு சர்பாட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பா.ரஞ்சித்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது நான் எடுத்த திரைப்படங்களிலேயே காலா திரைப்படம்தான் எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என பேசியிருந்தார் பா.ரஞ்சித். காலா படத்தின் திரைக்கதைக்காக வெகுவாக உழைத்திருந்தேன்.

ஆனால் மற்ற திரைப்படங்கள் அளவிற்கு காலா திரைப்படம் அதிக வரவேற்பை பெறவில்லை. நான் அந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த படம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது எனக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில் நான் அந்த படத்தில் என்ன வேலை பார்க்க வேண்டுமோ அதை பார்த்திருந்தேன். எனக்கு படம் பிடித்திருந்தது என கூறியுள்ளார் பா.ரஞ்சித்.

Articles

parle g
madampatty rangaraj
To Top