Cinema History
கம்மி சம்பளம் கொடுத்து உன்ன ஏமாத்துறாங்க! ரஜினிக்காக பஞ்சு அருணாச்சலம் எடுத்த நடவடிக்கை…
தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை அவரது மார்க்கெட் குறையாமல் இப்போது உள்ள இடம் நடிகர்களுக்கு கூட போட்டியாக நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு வந்த பொழுது 1000, 2000 என்று மிகக் குறைவான சம்பளத்திற்காக நடிக்க வந்தவர் ரஜினிகாந்த். ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார்.
ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த போது பல படங்களில் நடித்து பெரிய ஹிட் நடிகராக ஆன பிறகு, அவருக்கு சம்பளம் குறைவாகவே கொடுத்து கொண்டு வந்தனர் ஆனால் ரஜினிகாந்த் அதை குறித்து எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரஜினிகாந்தை அழைத்துச் சென்றார் பஞ்சு அருணாச்சலம். நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் வருவதற்கு அவருக்கு எவ்வளவு தர வேண்டும் என்று அவர் கேட்கும் பொழுது அதற்கு ரஜினி படங்களில் சம்பளமாக முப்பதாயிரம் வரை தருகிறார்கள் நீங்கள் ஒரு 15,000 அல்லது 20,000 கொடுத்தால் பரவாயில்லை எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் பஞ்சு அருணாச்சலத்திற்கு மிகவும் ஷாக்காக இருந்துள்ளது. உன் மார்க்கெட் என்னவென்று தெரியுமா? உனக்கு எவ்வளவு டிமாண்ட் என்று தெரியுமா? என்ன வெறும் முப்பதாயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய். என சத்தம் போட்டுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.
1978ல் வெளியாகிய ப்ரியா திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்போதுதான் துவங்கியிருந்தது. பஞ்சு அருணாச்சலம் அந்த படப்பிடிப்பு நிறுவனத்திடம் பேசி அப்போது முப்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சம்பளமாக வாங்கித் தந்தார்.