Cinema History
பொன்னியின் செல்வனில் விஜய் நடிக்க இருந்தாரா?. இது புது கதையா இருக்கே..!
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர்.
எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க முடியவில்லை. இறுதியாக இயக்குனர் மணிரத்னம்தான் இந்த கதையை படமாக்கியுள்ளார்.
இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும் கூட திரைப்படமாக்க ஆசைப்பட்டார். அதற்கு பிறகு தனது மகன் வெங்கட்பிரபுவை வைத்து அதை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
எனவே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி வெங்கட் பிரபுவிடம் கொடுத்த கங்கை அமரன் “இந்த கதையை முழுசா படி. இதை நீ படமாக்கணும்” எனக் கூறியுள்ளார். ஆனால் அதை இறுதிவரை வெங்கட்பிரபு படிக்கவே இல்லை.
அதன் பிறகு விஜய், அஜித்தை சந்தித்த கங்கை அமரன் அவர்களிடமும் கூட இந்த கதையை கூறியுள்ளார். பிறகு என் மகன் வெங்கட்பிரபு இந்த கதையை படமாக்கினால் அதில் நடிப்பீர்களா? என கேட்டுள்ளார்.
அதற்கு விஜய், அஜித்தும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால் வெங்கட்பிரபு அதில் பெரிதாக அபிப்ராயம் காட்டாத காரணத்தால் அதை இறுதிவரை அவரால் படமாக்க முடியவில்லை.
ஒருவேளை அப்போதே வெங்கட் பிரபு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கியிருந்தால் அதில் இரண்டு மாஸ் ஹீரோக்களை சேர்த்து பார்த்திருக்க முடியும்.