நடிகையை தடவிக்கிட்டே இருப்பான்.. மிஸ்கின் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்.!

இயக்குனர் மிஸ்கின் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதற்கு நடுவே நடிப்பின் மீதும் ஈடுபாடு காட்டினார் மிஸ்கின். அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. லியோ, மாவீரன் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும் இப்போதும் இவர் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அப்படியாக அவர் இயக்கிய பிசாசு 2 மற்றும் ட்ரெயின் ஆகிய திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் இயக்கப்பட்டு திரைக்கு வர இருக்கின்றன.

mysskin
mysskin
Social Media Bar

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த மிஸ்கின் அங்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். அது மிகவும் சர்ச்சையாகி வருகிறது. இந்த நிலையில் மிஸ்கின் குறித்து சர்ச்சையான கருத்தை அளித்துள்ளார் பத்திரிக்கையாளர் உமாபதி.

அதில் அவர் கூறும்போது மிஸ்கினை எனக்கு தெரியும். அவன் எல்லோரையும் அவன் இவன் என அழைக்கிறான். இப்போது யாராவது ஒரு நபர் மிஸ்கினிடம் வந்து டேய் மிஸ்கின் உன் படத்தை பார்த்தேண்டா. நல்லா இருந்துச்சு என கூறினால் அவன் சும்மா இருப்பானா? உடனே உதவி இயக்குனரை அழைத்து அவனை வெளியே அனுப்ப சொல்லுவான்.

ஆனால் மிஸ்கின் மட்டும் எல்லோரையும் அவன் இவன் என அழைப்பான். அதே மாதிரி மிஸ்கின் நடிகையின் தொடையில் கையை வைத்து தேய்த்து கொண்டே இருப்பான். கேட்டால் அது அவனுடைய பழக்கம் என கூறுவான் என மிஸ்கின் குறித்து மிக சர்ச்சையான கருத்தை பத்திரிக்கையாளர் உமாபதி கூறியுள்ளார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.