Cinema History
பொன்னியின் செல்வன் மட்டும் இல்ல!. ரஜினி கூட எல்லாம் போட்டி போட்டுருக்கேன்!.. மாஸ் காட்டிய பிரபல தயாரிப்பாளர்!..
திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு படத்தை இயக்குவதில் துவங்கி பல்வேறு நிலைகளில் அந்த படத்திற்கு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அதில் இறுதிகட்ட பிரச்சனை என்றால் அது படத்தை வெளியிடுவதில் இருக்கும் பிரச்சனைதான்.
ஒரு படத்தை ஏற்கனவே இந்த தேதியில் வெளியிடலாம் என திட்டமிட்டு வைத்திருக்கும்போது அதே தேதியில் பெரிய ஹீரோ படம் ஒன்று வெளியாக இருந்தால் என்ன செய்ய முடியும். அப்போது சின்ன படங்கள் தங்கள் தேதியை மாற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இப்படியான நிலையை தமிழில் அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தித்திருப்பார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். ஆனால் அவர் மற்ற தயாரிப்பாளர்கள் போல தேதியை மாற்றாமல் பெரும் படங்களோடு போட்டி போட்டுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறும்போது தளபதி வெளியாகவிருக்கும் அதே நாளில் என்னுடைய திரைப்படமான வண்ண வண்ண பூக்கள் வெளியானது. ஆனாலும் நல்ல வசூலை கொடுத்தது வண்ண வண்ண பூக்கள். அதே போல சந்திரமுகி வெளியான போது அதற்கு எதிராக சச்சின் திரைப்படத்தை வெளியிட்டேன். இப்போது பொன்னியின் செல்வன் வெளியானபோது கூட நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட்டேன்.
இவ்வளவு பெரிய படங்களோடு போட்டியிட்டும் என் படங்கள் நல்ல வசூலையே கொடுத்தன என கூறுகிறார் கலைப்புலி எஸ் தாணு.