Tamil Cinema News
இந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன்.. அப்போதே மனோபாலாவுக்கு திகில் கொடுத்த ரஜினி.. கஷ்டப்பட்ட மனோபாலா.!
தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக தனக்கென்று தனி இடத்தை பிடித்து இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் மாஸ் ஹிட் படங்களாகதான் இருந்து வருகின்றன
தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் 2 திரைப்படம் தொடர்பான டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் வந்த ரஜினிகாந்த் உண்மையான ரஜினிகாந்த் கிடையாது. அது ரஜினிகாந்தின் டூப் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் பழைய செய்தி ஒன்று பிரபலமாகி வருகிறது. நடிகர் மனோபாலாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து 1987 இல் வெளிவந்த திரைப்படம் ஊர் காவலன்.
இந்த திரைப்படத்தில் ரஜினி குதிரையில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது ரஜினிகாந்த் குதிரையில் ஏறி நடிக்க முடியாது என கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இதனால் அதிர்ச்சியடைந்த மனோபாலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இந்த நிலையில் மனோபாலா அந்த காட்சியில் நடிப்பதற்கு டூப் போடலாம் என முடிவு செய்தார். அதன்படி மொத்த காட்சிகளும் டூப் போடப்பட்டு காட்சியாக்கப்பட்டது. எனவே ரஜினிகாந்திற்கு டூப் போடுவது என்பது ஒன்றும் புது விஷயம் கிடையாது. அவர் பலமுறை இதை செய்திருக்கிறார் என கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.
இருந்தாலும் கூட ஜெயிலர் 2 வில் இடம் பெற்ற காட்சிகள் எல்லாம் நிஜ காட்சிகள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
