Cinema History
என் அப்பாவுக்கு கூட அதை பண்ணுனது கிடையாது!.. சிவாஜிக்கு பண்ணுனேன்.. கண் கலங்கிய ரஜினிகாந்த்!..
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் வந்து தற்சமயம் தமிழ்நாட்டிலேயே முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எளிமையான குடும்பத்தில் பிறப்பவர்கள் கூட பெரும் உச்சத்தை தொடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் ரஜினிகாந்த்.
அவர் தனித்துவமான நடிப்பு திறமையை கொண்டிருந்தார் அவரது ஸ்டைலின் காரணமாகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டானார்கள். நாடகங்களில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே மிகவும் ஸ்டைலாக நடிக்க கூடியவர் ரஜினிகாந்த்.
சிவாஜி கணேசனுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. கிட்டத்தட்ட ரஜினிகாந்த் சிவாஜியை தனது தந்தை போன்றே கருதினார். ஒருமுறை சிவாஜி கணேசன் எதார்த்தமாக பேசி கொண்டிருக்கும்போது நான் இறந்தால் என் பிணத்தோடு நீ கூட வருவியாடா என கேட்டுள்ளார் சிவாஜி.
அதிர்ச்சியடைந்த ரஜினி ஏன் ஐயா அப்படி கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். இல்லை நீ வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்கு சென்றுவிடுகிறாய். இமயமலைக்கு செல்கிறாய். நான் இறக்கும்போது நீ இருப்பியோ இல்லையோ அதான் கேட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால் சிவாஜி கணேசன் இறந்தப்போது சரியாக அங்கு வந்து சேர்ந்தார் ரஜினிகாந்த். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது என் அப்பா இறந்தப்போது கூட நான் கூட இருக்கவில்லை. ஆனால் சிவாஜி இருந்தப்போது அவருடனேயேதான் நான் இருந்தேன் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்!.