Tamil Cinema News
இயக்குனராக களம் இறங்கும் ரவி மோகன்.. ஹீரோ யார் தெரியுமா?.
நடிகர் ரவி மோகன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில காலங்களாகவே அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகளே கிடைக்காமல் இருந்து வருகின்றன
பெரும்பாலும் இவரது நடிப்பில் வரும் திரைப்படங்களில் கதைதான் சரியில்லை என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அவர் நடித்த ப்ரதர், சைரன் போன்ற எந்த திரைப்படமும் பெரிய வெற்றி என்று எதையும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் நடிகர் ரவி மோகன். அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்திற்கும் திரைப்படங்களும் முக்கியமான கதை அம்சத்தை கொண்டவை என கூறப்படுகிறது.
இதற்கு நடுவே ரவி மோகனுக்கு திரைப்படங்களை இயக்குவதிலும் ஆர்வம் இருந்து வருகிறது. அடுத்து ஒரு திரைப்படத்தையும் இவர் இயக்க போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து அடுத்து நடிகர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஜெயம் ரவி ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்சமயம் யோகி பாபு பிஸியாக இருப்பதால் தாமதமாகதான் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.
