Connect with us

மறு வெளியீடு திரைப்படங்களால் வந்த பிரச்சனை.. தத்தளிக்கும் தமிழ் சினிமா..!

Tamil Cinema News

மறு வெளியீடு திரைப்படங்களால் வந்த பிரச்சனை.. தத்தளிக்கும் தமிழ் சினிமா..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக மறுவெளியீட்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. போன வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரபலமான திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

ஏனெனில் எல்லா காலங்களிலும் திரையரங்குகளில் படங்கள் வந்த வண்ணமே இருக்காது. சில சமயங்களில் திரைப்படங்களே வெளியாகாத காலக்கட்டங்களும் இருக்கும். எனவே அந்த சமயங்களில் பழைய படங்களை வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கும் அமோகமான வரவேற்பு கிடைத்தது. அதன் வெற்றியை தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுக்கொண்டேன் திரைப்படத்தையும் மறு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

 

அதே சமயம் இப்படி மறுவெளியீடு திரைப்படங்கள் அதிக வெற்றியை பெறுவது தமிழ் சினிமாவிற்கு ஒரு வகையில் பாதிப்பு என பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் 1000 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் புஷ்பா, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் மாதிரியான படங்கள் எல்லாமே சண்டை படங்கள்தான்.

இதனால் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலான படங்கள் துப்பாக்கி, கத்தி, இரத்த காட்சிகள் என்றுதான் இருக்கின்றன. இதற்கு நடுவே குடும்பங்கள் கொண்டாடும் கதைகளங்களில் திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டன.

அந்த இடத்தை இப்போது மலையாள சினிமாக்கள்தான் நிரப்பி வருகின்றன. பாசில் ஜோசப் மாதிரியான நடிகர்கள் எல்லாம் அங்கு குடும்ப கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதனால் அந்த படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன.

பழைய தமிழ் படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக இருப்பதால் நல்ல வெற்றியை கொடுக்கின்றன. இப்படியே போனால் தமிழில் புதிய படங்களின் ஓட்டம் என்பது குறைந்துவிடும் என ஒரு பேச்சு இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top