Connect with us

சினிமாவை மிஞ்சிய காதல் கதை.. வீடு கட்டி துரத்திய உறவினர்கள்.. ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த சம்பவம்.!

rj balaji

Tamil Cinema News

சினிமாவை மிஞ்சிய காதல் கதை.. வீடு கட்டி துரத்திய உறவினர்கள்.. ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த சம்பவம்.!

Social Media Bar

சாதாரணமாக வானொலியில் வேலை பார்த்து அதன் மூலமாக பிரபலமடைந்து பிறகு சினிமாவிற்கு வந்து இப்பொழுது பெரிய நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜே பாலாஜியை பொறுத்தவரை மற்ற சினிமா நடிகர்களை போல சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்கிற கனவில் சினிமாவிற்கு வந்தவர் கிடையாது. அவருக்கு முதலில் தமிழில் காமெடியனாகதான் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அதனை பயன்படுத்திக்கொண்டு உள்ளே வந்த ஆர்.ஜே பாலாஜி காமெடியனாக திரைப்படங்களில் நடிப்பதை விட காமெடி கதாநாயகனாக நடிப்பது அதிக வரவேற்பு கொடுக்கும் என்று நினைத்தார். அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி காமெடி கதாநாயகனாக மாறினார்.

தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தனர். இப்பொழுது ஒரு சக்சஸ்ஃபுல் கதாநாயகனாக இருக்கும். ஆர்.ஜே பாலாஜி அடுத்தது திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனக்கு நடந்த காதல் கதையை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

rj balaji

rj balaji

ஆர்.ஜே பாலாஜியின் காதல் கதை:

ஆர்.ஜே பாலாஜி கல்லூரியில் படித்த காலத்திலேயே அவரது வகுப்பில் படிக்கும் இன்னொரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் சில காலங்களிலேயே இந்த விஷயம் பெண் வீட்டாரருக்கு தெரிந்து விட்டது அதனை தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டனர்.

அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி படிப்புக்காக கோயம்புத்தூர் சென்று விட்டார் சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று அவருடைய காதலி போன் செய்து நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆர்.ஜே பாலாஜி அங்கே இவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்ணின் வீட்டார் தொடர்ந்து துரத்தி வந்தனர்.

அந்த பெண் அவருடைய தந்தை குறித்து கூறும்பொழுது எனது தந்தை மிகவும் மோசமானவர் நம்மை கண்டுபிடித்துவிட்டால் கொன்றுவிடுவார் என்றெல்லாம் பேசியிருக்கிறார் கடைசியில் அவர்களை சந்தித்த பொழுது அவர்கள் மிக அமைதியாக பேசி இருக்கின்றனர். அந்த பெண்தான் அவரது காதல் மனைவி. இந்த நிகழ்வை ஆர்.ஜே பாலாஜி அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top