Connect with us

தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

leo rohini theatre

Latest News

தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

cinepettai.com cinepettai.com

நடிப்புத் துறையில் சில இயக்குனர்கள் உயிரை கொடுத்து படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜன் முக்கியமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே கடலளவு உழைப்பை போட்டுதான் எடுக்கிறார்.

லியோ திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உழைத்து உள்ளார் என்று கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் மக்கள். இதனால் ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்த படத்திற்கு போகும்பொழுது அதைவிட இன்னொரு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டிய நிலையில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

லியோ படப்பிடிப்பு:

லியோ படத்தின் ஆரம்ப படப்பிடிப்புகள் ஜம்மு காஷ்மீரில் நடந்தது அங்கு கொட்டும் பணியில் விடியல் காலை மற்றும் இரவு நேரங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தினார் லோகேஷ் கனகராஜ். அவ்வளவு கஷ்டப்பட்டு லியோ திரைப்படம் உருவாகி ஒரு வழியாக நாளை இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஆனால் கடைசி நேரத்தில் சில பிரச்சனைகள் காரணமாக லியோ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது சென்னையில் பிரபலமான திரையரங்கான ரோகினி திரையரங்கம் லியோ படத்திற்கான முன்பதிவை இன்னும் துவங்கவே இல்லை.

திரையரங்கம் செய்த சம்பவம்:

அந்த திரையரங்கம் மட்டுமின்றி இன்னும் சென்னையில் அதிக ரசிகர்கள் வரக்கூடிய திரையரங்கான வெற்றி, கமலா, சங்கம், தேவி உள்ளிட்ட திரையரங்குகள் எதுவுமே லியோ திரைப்படத்திற்கான முன்பதிவை துவங்கவே இல்லை.

நாளை திரைப்படம் வெளியாகும் நிலையில் இன்னும் ஏன் முன்பதிவு துவங்கவில்லை என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று லியோ திரைப்படம் எங்கள் திரையரங்கில் வெளியாகாது என்று ரோகிணி திரையரங்கம் நோட்டீஸ் போர்டில் எழுதி போட்டுவிட்டனர்.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். படத்திற்கான ஷேர் தொடர்பாக திரையரங்குகளுடன் பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முக்கியமான திரையரங்குகளில் வெளியாகாமல் நாளை லியோ திரைப்படம் வெளியானால் அது படத்தின் வசூலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் ரசிகர்கள் திரையரங்கை சேதப்படுத்தியதால் ரோகினி திரையரங்கிற்கு 10 லட்ச ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பங்கிட்டிலும் அவர்கள் பிரச்சனை செய்ததால் ரோகிணி திரையரங்கம் கோபத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

POPULAR POSTS

sundar c prasanth
jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
To Top