Connect with us

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

vijayakanth SA chandrasekar

Latest News

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

cinepettai.com cinepettai.com

SA Chandrasekar : தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாழ்க்கை தந்தவர் விஜயகாந்த் எனக் கூறலாம். தமிழில் அவர் வாய்ப்பு தேடிய பொழுது மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே ஒரு படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது.

எனவே விஜயகாந்த் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் உடனே வாய்ப்பு கொடுத்து வந்தார். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கும் அறிமுக நடிகர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனராக அப்போது பணி புரிந்து வந்த எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தின் மூலமாகவே அதிகமாக பிரபலமானார்.

விஜயகாந்த்தை வைத்து எக்கச்சக்கமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சந்திரசேகர். இவர்களது காம்போ நல்ல வெற்றி காம்போவாக அமைந்ததால் விஜயகாந்த் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

இந்த நிலையில் தனது மகன் விஜய் கதாநாயகனாக வேண்டும் என்று நினைத்த எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்த் திரைப்படங்களில் எல்லாம் சிறுவயது விஜயகாந்த் என்று ஒரு குழந்தை கதாபாத்திரத்தையும் வைத்தார் அந்த குழந்தை விஜயகாந்த் ஆக விஜய் தான் பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு 1992 ல் விஜய் நடிப்பில் நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது இதனை தொடர்ந்து தனியாக விஜய்யை அறிமுகப்படுத்துவது மக்கள் மத்தியில் பிரபலமாக்காது.

எனவே விஜயகாந்த் மூலமாக விஜயை நாம் பிரபலப்படுத்துவோம் என்று யோசித்த எஸ்.ஏ சந்திரசேகர் இது குறித்து விஜயகாந்திடம் பேசினார் விஜயகாந்த் அதற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கூறாமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அப்படி உருவான படம்தான் செந்தூரப்பாண்டி எஸ்.ஏ சந்திரசேகரின் குடும்பத்திற்கு விஜயகாந்த் இவ்வளவு நன்மைகளை செய்தும் கூட நடிகர் விஜய், சந்திரசேகர் இருவரும் இன்று விஜயகாந்தின் இறப்பை குறித்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. ஆனால் காலை 11 மணி அளவில் எஸ் ஏ சந்திரசேகர் அபுதாபியில் மகிழ்ச்சியாக இருந்து வருவதை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட நேரம் இருக்கும் பொழுது விஜயகாந்தின் இழப்பிற்கு ஒரு இரங்கல் தெரிவிக்க நேரமில்லையா என்று கேள்வி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். நெட்டிசன்கள் பேச துவங்கியதை அடுத்து தற்சமயம்  ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.

To Top