Latest News
செகண்ட் ஆஃப் நல்லாயில்லைனு அப்பவே லோகேஷ்கிட்ட சொன்னேன்!.. வன்மம் தீர்த்த எஸ்.ஏ சந்திரசேகர்!..
SA Chandrasekar: தமிழ் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனது இரண்டாவது படத்தின் மூலமாகவே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் எஸ்.ஏ சந்திரசேகர்.
சட்டம் ஒரு இருட்டறை என்கிற திரைப்படம் பிறகு பல மொழிகளில் ரீமேக் ஆகி வெளியானது. இந்த நிலையில் வளர்ந்து வந்த பிறகு தனது மகன் விஜய்யை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ சந்திரசேகர். விஜய்யை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியப்போதே அவரை ஒரு ப்ளேபாய் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தியதால் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாக விஜய்யின் படம் அமையவில்லை.
இந்த நிலையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையை இயக்குனர் விக்ரமன் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலமாக மாற்றி அமைத்தார். அதன் பிறகு தனது தந்தை திரைப்படத்தில் நடிப்பதை குறைத்துகொண்டார் விஜய். இருந்தாலும் தந்தை என்கிற வகையில் இப்போது வரை விஜய் படங்களில் எஸ்.ஏ சந்திரசேகரின் தலையீடு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் தேசிங்கு ராஜா 2 திரைப்பட விழாவில் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் லியோ திரைப்படம் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். லியோ திரைப்படத்தில் லியோவின் தந்தை அவரை பலி கொடுக்க இருப்பதாக ஒரு காட்சி வரும்.
அதுக்குறித்து லோகேஷிடம் பேசிய சந்திரசேகர் கிருஸ்துவ வழக்கப்படி பலி கொடுக்கும் நடைமுறை என்பதே கிடையாது என கூறியுள்ளார். இருந்தாலும் அதை லோகேஷ் கண்டுக்கொள்ளாமல் படத்தில் வைத்ததால் அந்த காட்சி விமர்சனத்துக்கு உள்ளானது என கூறியுள்ளார்.