நான்காம் நாளில் சரிவை கண்ட சலார்!.. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை!.

Salaar Cease Fire : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார். திரைப்படத்தின் முதல் போஸ்ட்டர் வெளியான நாள் முதலே படத்திற்கான வரவேற்பு என்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் சலார் திரைப்படம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திரையில் வெளியானது. முதல் நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் 190 கோடி ரூபாய்க்கு ஓடி பெரும் வசூலை கொடுத்தது சலார் திரைப்படம்.

salaar1
salaar1
Social Media Bar

கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் அதிக வசூலை செய்து வந்தது சலார் மூன்று நாட்களின் முடிவில் கிட்டத்தட்ட 400 கோடி வசூல் செய்திருந்தது சலார் திரைப்படம். ஆனால் தென்னிந்தியாவில் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் சலார் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு இல்லை.

கே.ஜி.எஃப் பார்த்துவிட்டு சலார் மீது எதிர்பார்ப்பு கொண்டு பார்த்த மக்கள்தான் இந்த மூன்று நாளும் படத்தை வெற்றியடைய செய்திருக்கின்றனர். சாதாரண ரசிகர்கள் படத்தை பார்க்க சென்ற பொழுது அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பல திரையரங்குகளில் சலாருக்கு கூட்டம் வரவில்லை என்று சலாருக்கு பதிலாக வேறு படங்களை மாற்றி உள்ளனர் இதனை அடுத்து தமிழகத்தில் சலார் திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறைந்துள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களில் இன்னும் வரவேற்பை பெற்று ஓடி கொண்டுள்ளது சலார் திரைப்படம்.