Connect with us

மருமகளை அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்த நாகார்ஜூனா… கடுப்பான நாக சைதன்யா.. வெடிக்கும் புது சர்ச்சை..!

samantha nagarjuna

News

மருமகளை அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்த நாகார்ஜூனா… கடுப்பான நாக சைதன்யா.. வெடிக்கும் புது சர்ச்சை..!

Social Media Bar

தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா பற்றி பேசியிருக்கும் விஷயம் தான் தற்சமயம் அதிகமாக வைரலாகி வருகிறது. நேற்று கொண்டா சுரேகா ஒரு நேர்காணலில் பேசும்பொழுது சமந்தாவிற்கும் நாகார்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் சமந்தா விவாகரத்து செய்தார்.

அதற்கு பின்பு ஒரு அரசியல் காரணம் இருக்கிறது என்று அவர் கூறுகிறார் அதாவது தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் ஆன கே.டி இராமராவ் நாகார்ஜுனா சட்ட விரோத விரோதமாக கட்டிய கட்டடம் ஒன்றை கண்டறிந்தார்.

அதை எதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் சமந்தாவை ஒரு இரவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் அமைச்சர் கேட்டதாக கூறியுள்ளார். கொண்டா சுரேகா. இதனை அடுத்து நாகார்ஜுனா சமந்தா விடம் இது பற்றி பேசியிருக்கிறார். இதனால் சமத்தா அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போகவே நாகார்ஜுனா அதை பெரிய பிரச்சினை ஆக்கி விவாகரத்துக்கு கொண்டு சென்றார் என்று கூறியிருக்கிறார்.

samantha

சமந்தா குறித்து வந்த பிரச்சனை:

அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் தான் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட நாகார்ஜுனாவின் அரங்கம் ஒன்று இடிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து நடிகை சமந்தா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் நாக சைதன்யாவுமே கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார் அதில் கூறி இருக்கும் நாக சைதன்யா எனது முன்னாள் மனைவியை பற்றி தொடர்ந்து தவறாக பேசுவது மிகுந்த கோபத்தை அளிக்கிறது.

இதற்கு முன்பு அவருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் இது குறித்தும் நான் பேசாமல் அமைதியாக இருந்து வந்தேன். தொடர்ந்து அவரை தொந்தரவு செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி சமந்தாவிற்கு ஆதரவான பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு நடுவே நடிகர் நாணியும் சமந்தாவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் தொடர்ந்து இன்னும் பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு ஆதரவாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top