Connect with us

படுக்கையில் எனக்கு முடியவே இல்ல… விட்டுடுங்கன்னு கெஞ்சினேன்.. சமந்தா ஓப்பன் டாக்.!

Tamil Cinema News

படுக்கையில் எனக்கு முடியவே இல்ல… விட்டுடுங்கன்னு கெஞ்சினேன்.. சமந்தா ஓப்பன் டாக்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளில் முக்கியமானவராக நடிகை சமந்தா இருந்து வருகிறார். சமந்தா ஆரம்பத்தில் தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ஆனால் அந்த திரைப்படங்களை விடவும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த சமத்தாவிற்கு தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் சில காலங்களாக மயோ சிட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா திரைத்துறையில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறார். தொடர்ந்து தனது உடல் நலத்தை மேம்படுத்தி வருகிறார் சமந்தா.

உடல் நல பிரச்சனை:

சீக்கிரமாகவே இவர் மீண்டும் திரையுலகில் வந்து பழையபடி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிவி சீரியஸ் மீது கவனம் செலுத்தி வந்த சமந்தா சிட்டாடல் என்கிற ஒரு சீரியசில் நடித்திருந்தார். இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது உங்களுக்கு உடல் நலக்குறைவு இருக்கும் பொழுது சிட்டாடல் சீரியஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதில் எப்படி நடத்தீர்கள் என்று கேட்டனர் அப்பொழுது பதிலளித்த சமந்தா அப்பொழுது நான் மிகுந்த கஷ்டத்தில் இருந்தேன். படுக்கையில் இருந்து எழுவதே சிரமம் என்கிற நிலை இருந்தது ஆனாலும் அந்த சீரியஸில் அதற்கு முன்பே நடிக்க துவங்கி விட்டேன் என்பதால் கஷ்டப்பட்டு தான் நடித்து கொடுத்தேன்.

ஆனால் அது வெளிவந்த பிறகு தான் அதில் நடித்தது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது என்று கூறியிருக்கிறார் சமந்தா.

 

Articles

parle g
madampatty rangaraj
To Top