Connect with us

போதும் சாமி ஆளை விடு.. சிம்பு படத்தில் இருந்து விலகிய சந்தானம்..

Tamil Cinema News

போதும் சாமி ஆளை விடு.. சிம்பு படத்தில் இருந்து விலகிய சந்தானம்..

Social Media Bar

சிம்பு அடுத்து தனது 49 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வந்தது.

ஏனெனில் இந்த திரைப்படத்தை பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது மேலும் சந்தானம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

எனவே இந்த திரைப்படம் ஒரு நல்ல வெற்றி படமாக வரும் என்று சிம்பு ரசிகர்களே ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சந்தானம் விலகி விட்டதாக சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

simbu

simbu

சந்தானம் தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருவதால் எந்த திரைப்படத்திலும் அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை. ஆனால் சிம்பு தனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதால் சிம்பு படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

இருந்தாலும் சிம்புவின் படத்தில் சந்தானம் நிறைய காட்சிகளை மாற்றியமைத்ததாகவும் அதனால் அவர் படத்தில் இருந்து விலகியதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top