Connect with us

ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..

sarathkumar shankar

Cinema History

ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..

cinepettai.com cinepettai.com

Deva and Sarathkumar: திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுக்கு முதல் படம் என்பது எப்போதுமே முக்கியமான படமாகும். அவர்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை முதல் படங்கள்தான் அளிக்கிறது. முதல் படத்தின் வெற்றியை வைத்தே பலரின் திரை வரலாறு துவங்குகிறது.

அப்படியாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடம் தனது திறமையை வெளிப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு பிறகு அவர் இயக்கிய இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது ஷங்கருக்கு ஜெண்டில்மேன் திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான்தான். என கூறியுள்ளார். ஜெண்டில்மேன் திரைப்படத்தை கே.டி குஞ்சுமோன் தயாரித்தார். அப்போது கே.டி குஞ்சுமோனிடம் நல்ல பழக்கத்தில் இருந்த சரத்குமார் அவரிடம் பேசி ஷங்கருக்கு வாய்ப்பளிக்குமாறு கூறியதாக கூறியுள்ளார்.

அதே போல தேவாவிற்கும் சரத்குமார்தான் வாய்ப்பு வாங்கி தந்ததாக கூறுகிறார். அதிகாலை சுபகாரியம் என்கிற திரைப்படத்திற்காக அவருக்கு சினிமாவில் முதன் முதலில் சம்பளம் கொடுத்ததே நான் தான் என கூறியுள்ளார் சரத்குமார்.

இவர்கள் இருவரையுமே சரத்குமார்தான் அறிமுகப்படுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும். தேவா மனசுக்கேத்த மகராசா திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு வைகாசி பிறந்தாச்சு திரைப்படத்தில் இசையமைத்தப்போதே அவருக்கான அங்கீகாரம் கிடைக்க துவங்கியது.

அதற்கு முன்பு இளையராஜாவின் குழுவில் தேவா வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேவா வாழ்க்கை வரலாற்றில் அவருக்கு சரத்குமார் வாய்ப்பு கொடுத்தது போல எந்த தகவலும் கிடைக்கவில்லை.

To Top