Connect with us

யாருக்கிட்ட ப்ரோ உருட்டுறீங்க!.. ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்தால் கடுப்பான சசிக்குமார்!..

sasikumar gnanavel

News

யாருக்கிட்ட ப்ரோ உருட்டுறீங்க!.. ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்தால் கடுப்பான சசிக்குமார்!..

Social Media Bar

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டிருப்பது இந்த அமீர் மற்றும் ஞானவேல்ராஜா பிரச்சனைதான். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

இந்த படம் அவர்கள் அனைவருக்குமே முக்கியமான படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது இயக்குனர் அமீர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார் ஞானவேல்ராஜா.

இதனையடுத்து அமீரை அப்படி பேசியது தவறு என குறிப்பிட்டு இயக்குனர் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இயக்குனர் பாரதிராஜாவும் கூட இதுக்குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. இதுவரை நான் அதுக்குறித்து பேசியது இல்லை. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் என்மீது சுமத்திய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது எனது வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.

இதற்கு பதிலளித்த இயக்குனர் சசிக்குமார், அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு என்ன? திட்டமிட்டு அவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன நியாயம் என கேள்விகளை எழுப்பியுள்ளார் சசிக்குமார்.

இதனையடுத்து இந்த சண்டை இப்போது முடிவதற்கு வாய்ப்பில்லை என பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top