Connect with us

தமிழ் சினிமாவில் அந்த சமயத்தில் போதை புடிச்சி திருஞ்சேன்.. சேரன் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர்..!

Tamil Cinema News

தமிழ் சினிமாவில் அந்த சமயத்தில் போதை புடிச்சி திருஞ்சேன்.. சேரன் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர்..!

Social Media Bar

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய பிறகு நடிகராக மாறியவர் நடிகர் சேரன். சேரனை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து இயக்குவார்.

அவர் இயக்கிய படங்கள் எல்லாமே அந்த மாதிரியான திரைப்படங்கள் தான் அதற்குப் பிறகு அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்ல மறந்த கதை திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார் சேரன்.

அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் அவர் நடிகராக நடித்திருக்கிறார் மேலும் ஆட்டோகிராப் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சேரன் கூறும் பொழுது ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிகராக வேண்டும் என்று தான் நான் வந்தேன்.

ஆனால் இயக்குனர்களை பார்த்த பிறகு எனது எண்ணம் மாறிவிட்டது இயக்குனர்தான் 100 பேரை கட்டி ஆளும் ஒரு சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகன் யார் என்றால் அது இயக்குனர் தான் எனவே இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இயக்குனர் ஆன பிறகு தொடர்ந்து ஏழு திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக கொடுத்தேன்.

அது எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது எனவே நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகுதான் இயக்குனர் தங்கர்பச்சான் என்னிடம் சொல்ல மறந்த கதை திரைப்படத்தின் கதையை கூறினார். எனக்கு அப்பொழுதும் கதாநாயகனாக நடிக்க ஆசை இல்லை.

ஆனால் அந்த படத்தின் கதை என்னை வெகுவாக பாதித்தது அதனால் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் சேரன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top