Tamil Cinema News
விஜய், ரஜினி எல்லாம் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா.. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு..!
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலைக்கு அவரை கொண்டு வந்த திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது.அமரன் திரைப்படம் நிஜ ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை பேசும் வகையில் படத்தின் கதை அமைந்திருந்தது.
அது படத்திற்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ், சுதா கொங்காரா மாதிரியான பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்சமயம் பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் ரீ ரிலீஸ் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தி ரஜினி நடித்த தளபதி திரைப்படம் கூட ரி ரிலீஸ் ஆகியிருந்தது. இதற்கு நடுவே விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுத்த மதகஜ ராஜா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மதகஜ ராஜா திரைப்படம் வரவேற்பை பெற்றதை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகும்பட்சத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.