Connect with us

50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..

sivakarthikeyan

Latest News

50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..

cinepettai.com cinepettai.com

Sivakarthikeyan :  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற ஆண்டு வந்த படம் ப்ரின்ஸ். ப்ரின்ஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படம் இந்த வருடம் வெளியாகி இருக்கும்போதும் சிவகார்த்திகேயன் மற்றொரு திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே யாத்திசை திரைப்படம் சிறப்பான திரைப்படம்.

நான் அந்த திரைப்படத்தை மிகவும் விரும்பி பார்த்தேன். அவர்களுக்கு மட்டும் ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்து ஒரு 50 கோடி ரூபாய் பட்ஜெட் கிடைத்திருந்தால் அவர்கள் அந்த படத்தை சிறப்பாக எடுத்திருப்பார்கள். நமக்கும் தமிழில் பாகுபலி மாதிரியான ஒரு திரைப்படம் கிடைத்திருக்கும்.

நான் அந்த படத்தை பார்த்த உடனேயே படத்தின் இயக்குனருக்கு போன் செய்து வாழ்த்தினேன். அந்த படத்தின் மொத்த கதை அம்சமுமே கூட பிரமாண்டமாக இருந்தது என புகழ்ந்து கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தின் இயக்குனரான தரணி ராசேந்திரன் இதற்கு முன்பு ஞான செருக்கு என்னும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

POPULAR POSTS

sree leela
modi sathyaraj
vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
tamil actress
To Top