Connect with us

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

sivarajkumar raghuvaran

Cinema History

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

Social Media Bar

தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் நடிகர் ரகுவரனும் ஒருவர். வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் ரகுவரன்.

உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவரை விட சிறப்பாக யாரும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு இருக்கும். அதே போல பிற்காலங்களில் அவர் நடித்த திருமலை யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களிலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்தனைக்கும் வில்லனுக்கான எந்த ஒரு சாயலையும் அந்த கதாபாத்திரங்களில் பார்க்க முடியாது. சமீபத்தில் நடிகர் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் ரகுவரனின் தம்பியை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார்.

அவரைப் பார்த்ததும் இவருக்கு அதிர்ச்சி தாங்கவில்லை, ஏனெனில் ரகுவரன் மீது அவ்வளவு மரியாதை கொண்டவர் சிவராஜ் குமார் அவர் ரகுவரனின் தம்பியிடம் பேசும் பொழுது ரகுவரன் மாதிரி நடிப்பதற்கு இன்னொரு நடிகர் கிடையாது நான் அவரின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அடுத்து நான் நடிக்கும் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் எனக்கூறி ரகுவரன் தம்பியிடம் அவரது போன் நம்பரை வாங்கி சென்றுள்ளார் .

சிவராஜ் குமார் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கூட இவ்வளவு அடக்கமான மனிதராக இருக்கிறார் என்று அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

To Top