Connect with us

என்னோட படத்துலையே எனக்கு பிடிச்ச காமெடி!.. ஆனால் தயாரிப்பாளரால் யாருமே பார்க்க முடியாமல் போயிட்டு!.. சுந்தர் சி டாக்!..

sundar c

News

என்னோட படத்துலையே எனக்கு பிடிச்ச காமெடி!.. ஆனால் தயாரிப்பாளரால் யாருமே பார்க்க முடியாமல் போயிட்டு!.. சுந்தர் சி டாக்!..

Social Media Bar

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் நகைச்சுவை திரைப்படங்களாகதான் இருக்கும். முதன் முதலாக முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் சுந்தர் சி.

அந்த திரைப்படமே முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாகதான் இருந்தது. அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு காமெடி திரைப்படங்கள் மீது நல்ல வரவேற்பு இருப்பதை சுந்தர் சி அறிந்துக்கொண்டார்.

அதனை தொடர்ந்து அவர் உனக்காக எல்லாம் உனக்காக என்று முழுக்க முழுக்க காமெடி வைத்து திரைப்படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து அவரது மார்க்கெட் இன்னமும் அதிகமானது. தலைநகரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கினார். தற்சமயம் அவரே நடித்து இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் உங்கள் படத்தில் உள்ள காமெடியிலேயே சிறப்பான காமெடி காட்சி என்றால் எதை கூறுவீர்கள் என கேட்டப்போது நான் இயக்கிய மதகஜ ராஜா திரைப்படத்தில் க்ளைமேக்ஸில் ஒரு 20 நிமிட காட்சி வைத்திருந்தேன். அதுதான் என்னுடைய காமெடி காட்சிகளிலேயே சிறந்த காமெடி காட்சி என்பேன்.

ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகததால் உங்களால் அந்த காமெடியை பார்க்க முடியவில்லை என்றார் சுந்தர் சி. மேலும் அவர் கூறும்போது மதகஜ ராஜா இப்போது வெளியானாலும் சிறப்பான வெற்றியை கொடுக்க கூடிய படம். இப்போதும் அதை நல்ல விலைக்கு வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே வெளியிட்ட படங்களில் உள்ள கடன் பிரச்சனை காரணமாக இந்த படத்தை வெளியிடாமல் வைத்துள்ளார். அவர் நினைத்தால் மட்டுமே அந்த படம் வெளிவரும் என்கிறார் சுந்தர் சி.

To Top