Latest News
சுந்தரி சீரியல் நடிகை துவங்கிய புதிய பிஸ்னஸ்!.. என்ன தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன வாய்ப்புகளை பெற்று வந்த இவர் எப்படியாவது சினிமாவில் பெரிதாக வரவேண்டும் என ஆசை கொண்டிருந்தார்.
இந்த நிலையில் 20219 ஆம் ஆண்டு வெளியான ஐரா திரைபப்டத்தில் நயன் தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கேப்ரில்லா. என்னதான் நயன் தாரா திரைப்படத்திலேயே நடித்தாலும் சன் டிவியில் வெளியான சுந்தரி தொடர்தான் இவருக்கு முக்கியமான அடையாளமாக அமைந்தது.
கிராமத்தில் பிறந்து எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்கிற கனவை நோக்கி பயணிக்கும் ஒரு பெண்ணின் கதையாக சுந்தரி நாடகம் துவங்கியது. இப்போது வரை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் டி.ஆர்.பியிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர்களுக்கு நடிப்பை கற்று தரும் வகையில் கேபி தியேட்டர் பேக்டரி என்னும் நடிப்பு பள்ளியை துவங்கியிருக்கிறார் கேப்ரில்லா. நான் ரசித்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லி தருவது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.