Connect with us

புயல் பாதிப்பிற்கு உதவிக்கரம் நீட்ட களம் இறங்கிய சூர்யா கார்த்தி!.. எப்போதுமே முதல் கை இவங்க கைதான் போல!..

surya karthi

Latest News

புயல் பாதிப்பிற்கு உதவிக்கரம் நீட்ட களம் இறங்கிய சூர்யா கார்த்தி!.. எப்போதுமே முதல் கை இவங்க கைதான் போல!..

cinepettai.com cinepettai.com

Actor Surya and Karthi: நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் புயல் காரணமாக தீவிர மழை பெய்ய துவங்கியது. சென்னையை பொறுத்தவரை மழை என வந்துவிட்டால் அந்த மழை நீர் செல்வதற்கு இடமில்லாமல் போய்விடும். இதனால் அங்காங்கே நீர் தேங்கி அதன் மட்டம் உயர்ந்து சென்னையே வெள்ளக்காடாகி விடும்.

இந்த நிலையில் நேற்று நிற்காமல் பெய்த கடும் மழையால் சென்னை மாநகரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புயல் கரையை கடந்த நிலையில் இன்று மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் பணிகள் துவங்கின.

chennai-flood
chennai-flood

சென்னையில் பழுதான இடங்களை எல்லாம் சரி செய்து சில பகுதிகளில் மின்சாரமும் வழங்கி வருகின்றனர். சேரி மக்களால் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டத்தை அடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிவாரண நிதியாக அரசுக்கு ரூபாய் 10 லட்சத்தை வழங்கியுள்ளனர் சூர்யாவும், கார்த்தியும்,

இதனை தொடர்ந்து அடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

POPULAR POSTS

varalaxmi sarathkumar
kavin harish kalyaan
shakila bailwan ranganathan
vishal
ar rahman ilayaraja
gabriella
To Top