Connect with us

சிறுநீரை குடித்த சூர்யா பட வில்லன்.. இது ஒரு வைத்தியமாம்.!

Tamil Cinema News

சிறுநீரை குடித்த சூர்யா பட வில்லன்.. இது ஒரு வைத்தியமாம்.!

Social Media Bar

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பரேஷ் ரவால். இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, பரேஷ் ரவால் சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் ஏற்பட்ட தீவிரமான வலியால் அவதிப்பட்ட போது, அதற்கு சிகிச்சை என்ற நிலையில் தனது சிறுநீரை குடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம். இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கிருஷ்ணகுமார், பரேஷ் ரவால் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். பரேஷ் ரவாலுக்கு காலில் ஏற்பட்ட வீக்கத்தினால் நடக்கவே முடியாமல் தவித்த நேரத்தில், அஜய் தேவ்கன் ஒரு ஆச்சரியமான ஆலோசனை கொடுத்தாராம். அதாவது, பீர் குடிப்பது போல காலையில் எழுந்தவுடன் சிறுநீரை குடிக்க வேண்டும்; அதே நேரத்தில் புகை, மது, மாமிசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, 15 நாட்கள் இந்த முறையை பின்பற்றியதில் பரேஷ் ரவாலின் கால் வலி மற்றும் வீக்கம் சரியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது, சிறுநீரில் உள்ள உப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பொருட்கள் காரணமாக இது பயனளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும் இதே போல் தனது சிறுநீரை குடித்து வந்ததாகவும், அதுவே தனது நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணம் என அவர் கூறியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

To Top